சுவிட்சர்லாந்தில் வரி பிரகடனம் செய்வதற்கான கால அவகாசம் இந்த மாத 31ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது.
ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியவர்கள் தவிர்ந்த அனைவரும் 31ம் திகதிக்கு முன்னதாக தகவல்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கான்டன் மற்றும் வருமான அளவு என்பனவற்றின் அடிப்படையில் அபராதத் தொகை மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் மற்றும் சொத்து குறித்த தகவல்களை உரிய முறையில் வழங்குவதன் மூலம் அபராதங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.